BBC News, தமிழ் - முகப்பு
Top story
சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரக வளாகத்தை சேதப்படுத்திய காலிஸ்தானி குழுவினர் - இந்தியா கடும் கண்டனம்
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நடந்த போராட்டத்தின்போது தூதரக வளாகத்தை சேதப்படுத்திய கும்பல் குறித்து டெல்லி உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தமது அதிருப்தியை வெளியிட்டது.
ஆபாச காட்சிகள் ஓடிய பாட்னா ரயில் நிலைய திரைகள் - அதிர்ச்சியில் பயணிகள்
இந்த விவகாரத்தில் மாநில அரசின் ரயில்வே காவல் துறை நடவடிக்கை எடுக்க தாமதமானதாகவும் பின்னர் ரயில்வே பாதுகாப்புப்படையினர் தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அம்ரித்பால் சிங்: சந்தேகம் எழுப்பும் பஞ்சாப் போலீஸ் - இதுவரை நடந்தவை என்ன?
"அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார் பிடித்தனர். இரண்டாம் நாளில் 34 பேரும் மூன்றாம் நாளில் 2 பேரும் பிடிபட்டனர். அனைவரும் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள்," என்று காவல்துறை ஐ.ஜி கில் தெரிவித்தார்.
சதாம் ஹுசேனை வல்லரசுகள் வீழ்த்திய பழைய வரலாறு எழுப்பும் கேள்விகள்
இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால், அந்த கூற்றை எத்தனை நாடுகள் நம்பின, எவை நிராகரித்தன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
ஏஜென்சி மோசடி: கேள்விக்குறியாகும் கனடாவாழ் இந்தியர்கள் பலரின் எதிர்காலம்
விசா பெறுவதற்கு போலியான சேர்க்கைக் கடிதங்கள், ஆவணங்கள், தவறான தகவல்கள் கொடுத்த நபர்களை வெளியேற்ற கனடா உத்தரவு பிறப்பித்துள்ளது. பிபிசியிடம் பேசிய மாணவர்கள் தாங்கள் நிரபராதி என்றும், ஜலந்தரில் உள்ள குடியேற்ற ஆலோசனை நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகவும் அவர்களே இந்த ஆவணங்களை வழங்கியதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் மற்ற ஏஜென்சிகளுக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000: அரசின் அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்
"இந்தத் திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளனர். அப்படியென்றால் ஒரு கோடி பேருக்குகூட கொடுக்க முடியாது. இது ஒட்டு மொத்தமாக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்," என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
"குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"
தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு
இந்திய நீதித்துறையில் மூன்று திருநங்கைகள் நீதிபதி பதவியை வகித்து வருகின்றனர். 2017இல் மேற்கு வங்கத்தின் லோக் அதாலத்தில் ஜோயிதா மொண்டல், 2018இல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள லோக் அதாலத்தில் வித்யா காம்ப்ளே உறுப்பினர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, அசாமின் குவாஹட்டியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா திருநங்கை நீதிபதி ஆக நியமிக்கப்பட்டார்.
இலங்கையில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியவரை தேடி தமிழ்நாடு வந்த இளைஞர் - என்ன நடந்தது?
ஜெயக்குமார் அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது நிகழ்வை நான்காவது முறையாக இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. அதற்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்
பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் நடந்த திடீர் மாற்றம்
ஆஷூ என்னும் தன் அடையாளத்தை எதிர்த்து அலிஷாவாக மாறி, திருநங்கை சமூகத்தினரிடையே வெற்றியாளராக மாறியது எப்படி? அலிஷாவின் உணர்ச்சி போராட்டத்தை விவரிக்கிறது இந்தச் செய்தி.
ஆம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள்.
பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மூவர்ண கொடியை கீழே இறக்கிய கும்பல் – ஒருவர் கைது
பிரிட்டனின் லண்டன் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று மாலை(மார்ச்19) ஒரு கும்பல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு நல்லது என்று நம்மில் பலர் கருதுகின்றனர். அப்படி செய்வது உண்மையிலேயே உடலுக்கு நன்மை தருகிறதா?
பெண் ஆய்வாளர் சாதி, பாலின பாகுபாடு காட்டுவதாக தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவலர் புகார்
ஏற்கனவே ராமநாதபுரத்தில் இதே போல ஒரு சம்பவம் நடைபெற்று நான் தற்கொலை முயற்சி எடுக்கும் நிலைக்குச் சென்றேன். அதன் பிறகு இது போல் நடந்தபோது நான் புகார் அளித்ததில்லை. இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் விடுப்பில் சென்றுவிடுவேன் அல்லது பணியிட மாறுதல் பெற்றுவிடுவேன்.
“அம்மாவுக்கும் ஒரு துணை வேண்டும் அல்லவா!” – தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்
“அவர்களுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த என் மகன்கள் என்னிடம் வந்து எனக்கு மறுமணம் செய்து வைக்கவா எனக் கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது."
தேவாலயம் வந்த பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் பாதிரியார் சிக்கியது எப்படி?
பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது குளச்சல் காவல் ஆய்வாளர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
பாலியல் தாக்குதல் குறித்து பாரத் ஜோடோ யாத்திரையில் புகார்: ராகுல் வீட்டுக்கு வந்த போலீஸ்
பாரத் ஜோடோ யாத்திரையின்போது பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடப்பதாக ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக விசாரிப்பதற்காக, டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீட்டுக்கு போலீஸ் வந்துள்ளது.
இலங்கை உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்று முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?
உள்ளூராட்சி சபையொன்று கலையுமாயின் அல்லது அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இல்லாத போது, குறித்த சபையின் அதிகாரம் - அச்சபையின் ஆணையாளர் அல்லது செயலாளர் வசமாகும்.
இந்தியப் பிரிவினையை தடுக்க முயன்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் தோல்வியடைந்தது ஏன்?
இந்தியப் பிரிவினை ஆரம்பித்தபோது, மௌலானா அபுல் கலாம் ஆசாத் அதை கடுமையாக எதிர்த்தார். ஒரு இந்தியனாக, நாடு துண்டாடப்படுவதை அவர் விரும்பவில்லை
பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய பேச்சுக்கு ராகுல் வீட்டுக்கு வந்த போலீஸ் - காங்கிரஸ் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோதியின் உற்ற நண்பரை பாதுகாக்கும் முயற்சி இது என்றும், இது கோழைத்தனமான செயல் என்றும் கூறி காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய அரசியலிலும் இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆஸ்திரேலிய புயலில்117 ரன்னில் சாய்ந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸி.
விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது.
இம்ரான் கான் வீட்டை உடைத்து புகுந்த போலீஸ்: பாகிஸ்தானில் என்ன நடக்கிறது?
இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது போலீசாருக்கும் இம்ரான் கானுடைய கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
ஆர்ஆர்ஆர் படத்தை பணம் வாங்கிகொண்டு பாராட்டினாரா ஜேம்ஸ் கேமரூன்? தெலுங்கு திரையுலகை உலுக்கும் சர்ச்சை
தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான தம்மாரெட்டி பரத்வாஜ் ஆர்ஆர்ஆர் படம் குறித்து தெரிவித்துள்ள விமர்சனம் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
கீரிமலை சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு, இலங்கை ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா?
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமைந்த உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆயிரத்தெட்டு சிவன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், இலங்கையின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமான கீரிமலை ஆலயம் தற்போது முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

கத்தார் 2022: கொதிக்கும் மைதானம், சூட்டை தணிக்க பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஏன்?
கத்தார் முழுவதும் பரந்து விரிந்துள்ள போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10 க்கும் மேற்பட்ட மைதானங்களில் பிட்ச்களின் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கத்தாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் ஊழியர்கள் தெளித்தனர்.

விடுதலைக்குப் பிறகும் இந்திய அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காதது ஏன்?
இந்திய உச்ச நீதிமன்றம், 1967 ஆம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், பாஸ்போர்ட் வைத்திருப்பதும், வெளிநாடு செல்வதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.

இலங்கை ஜனாதிபதி இந்து மத பாதுகாப்பு பற்றி சொன்னது என்ன?
யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?
இதயத்தின் அளவு மற்றும் தசைகள் பெரிதாவதால், அதன் ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறிவியல்

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?
பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?
வரலாறு
இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு

இலங்கை நெருக்கடி - கட்டுரைகளின் தொகுப்புகள்
இலங்கை இப்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்களை அலசும் கட்டுரைகள், ஒரு மாதகாலமாக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் வாசிக்கலாம்
சிறப்புச் செய்திகள்
அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?
அந்தக் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு, முந்தைய நிகழ்வுகளைப் போல பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி கொந்தளிப்பைக் காட்டுவதாக மட்டும் முடியவில்லை.
எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
இவர் சுகாதாரமற்று வாழ்ந்து வந்துள்ளார். கொட்டிலில் உணவு சமைத்தால், அந்த பாத்திரங்களை கழுவ மாட்டார். அடுத்த சமையலையும் அதிலேயே சமைத்துள்ளார். மீனை எடுத்து, அரிசியுடன் போட்டு, அப்படியே சமைத்துள்ளார்
பொதுவெளியில் மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி வழங்கிய ஜெர்மன் அரசு
பெர்லினின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு விரைவில் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜெர்மன் மக்கள் இப்படி பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?
மனித மலத்தை சேமிக்கும் வங்கி எதற்குப் பயன்படும்?
அமெரிக்க மக்களின் குடல்களில் காணப்படும் பல வகையான பாக்டீரியாக்களை விட, இரண்டு மடங்கு அதிகளவில் பல்வேறு வகையிலான பாக்டீரியாக்களை அமேசான் பழங்குடிகள் தங்களது குடல்களில் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை போராட்டங்களால் நாட்டை விட்டு திரும்பி சென்ற 17 கப்பல்கள்
கடந்த கால போராட்டங்களின் பெறுபேறாக துறைமுகத்திற்கு வருகைத் தந்த 17 கப்பல்கள் திரும்பி சென்றுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தை சுற்றி எழும் விமர்சனங்கள்
"இசையமைப்பாளர் இல்லாமல் பழைய தமிழ் பாடல்களை மட்டுமே பின்னணியில் ஒலிக்கவிட்டு இரண்டு மணி நேர படத்தை எடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது"
அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உண்டா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும்
திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மிக் கல் ஒன்றில் கால் வைத்து வானத்தில் மேலே அண்ணாந்து மணமகன் வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்கு காட்டுவதாகவே சடங்கு இருக்கும்.
யார் இந்த 'வட மாநில தொழிலாளர்கள்'? எங்கிருந்து எதற்காக தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்?
பொதுவாக வட இந்திய தொழிலாளர்கள் என்று சொல்லப்பட்டாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்? எதற்காக வருகின்றனர்?
பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா திலகர்?
1881ல் பத்திரிகையாளராக தமது தொழிலைத் தொடங்கிய திலகர் 3 முரண்பட்ட விஷயங்களில் ஈடுபாடு காட்டினார். கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு பிரிட்டிஷ் பத்திரிகையியில் வெளியான அவரது கட்டுரையை மறுபிரசுரம் செய்தார். வட்டி முதலாளிகள் விவசாயிகளின் சிறு உடமைகளை பறிமுதல் செய்வதை தடை செய்யும் சட்டத்தை எதிர்த்தார், சாதி அமைப்பை ஆதரித்தார்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? முள்ளிவாய்க்கால் போரில் அவரோடு களத்தில் இருந்த போராளி பேட்டி
தமிழீழத்திற்கு மீண்டும் ஒரு தலைவன் வரக்கூடாது என்பதற்கான நிகழ்ச்சி திட்டமாக இந்த கூற்றை பார்க்கிறோம். யாருக்கு தேவையோ, அவர்களுக்காக இவர்கள் வேலை செய்கின்றார்கள் என நாங்கள் காண்கின்றோம். என்கிறார் முன்னாள் போராளி அரவிந்தன்.
தொலைக்காட்சி

பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
20.03.2023
புகைப்பட தொகுப்பு

அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்
இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.
ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்