BBC News, தமிழ் - முகப்பு
Top story
தமிழ்நாடு கல் குவாரிகள்: கண்காணிக்கத் தவறுகிறதா அரசு, விதிமீறல்கள் நடப்பது உண்மையா?
"இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகும் போது மட்டும் உரிமத்தை ரத்து செய்யும் பணிகளைச் செய்கின்றனர். அதன்பிறகு அரசுகள் இதனைக் கண்டுகொள்வதில்லை'' என்கிறார்.
நேரலை நிகாத் ஜரீன்: உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை
குத்துச்சண்டை மகளிர் உலக சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
"நாங்க தமிழர்கள் இல்லையா?" - ராஜீவ் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
பேரறிவாளனை நேரில் சந்தித்ததும் முதல்வர் கட்டியணைக்க சில காரணங்கள் உள்ளன. இந்த வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன், அவரது வாக்குமூலத்தைத் தவறுதலாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். அவரே கூறிய பிறகு அற்புதம்மாள் தொடர்ந்து பேசி வந்த வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில், 'பேரறிவாளன் நிரபராதி' என்ற பார்வை திரும்பியது. அந்த அடிப்படையில் ஓர் அப்பாவியை தவறாக சிறையில் சிக்கிவிட்டதை உணர்ந்து, முதல்வர் கட்டித் தழுவினார்.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவது யார்? சூடுபிடிக்கும் இறுதிக்கட்டம்
நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், பேர் சொல்லும் அளவுக்கு வீரர்கள் இல்லை, 'கத்துக்குட்டி அணி' என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட அறிமுக அணிகளான குஜராத் டைடன்சும், லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸும் புள்ளிப்பட்டியலில் கோலோச்சும் அதே நேரத்தில் ஃப்ளே ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்திருக்கின்றன.
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரிக்கலாம்: அமெரிக்க உயரதிகாரி
'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம்' அறிக்கையின்படி, 2010, 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15% ஆக இருந்தது.
தென்னை நார் தொழிற்சாலைகளால் பாதிக்கப்படும் தமிழக கிராமங்கள் - கள நிலவரம்
தொழிற்சாலைகளில் நார்த்தூள்களை மூன்று முறை, புதிய நீர் கொண்டு உலர்த்துவதால் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி வருகிறது.
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்றதாக 40 பேர் கைது
இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வேறொரு நாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர், இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னை 'க்ருஷா' கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு ரணில் பேசியது என்ன? சுவாரசிய கதை
நடல்லாவின் குழந்தை இறுதியில் க்ருஷாவுக்கு சொந்தமாவது போல், பிரதமர் ரணில் இறுதியில் தனக்கு ஒரு வெற்றி காத்திருக்கிறது என்பதை குறிப்பால் சொல்ல முயற்சிக்கின்றாரா?
முள்ளிவாய்க்கால் எங்கும் ராணுவத் தடுப்புகள்; துணிச்சலான பெண்கள் - செய்தியாளரின் குறிப்பு
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு அருகிலேயே சிறியதும் பெரியதுமாக பல ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இவை தவிர சிறிய கண்காணிப்பு கோபுரங்களும் ஆங்காங்கே உண்டு.
இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு
இலங்கை நெருக்கடி - கட்டுரைகளின் தொகுப்புகள்
இலங்கை இப்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்களை அலசும் கட்டுரைகள், ஒரு மாதகாலமாக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் வாசிக்கலாம்
காணொளி, "பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெட்கக்கேடானது'' - காங்கிரஸ், கால அளவு 3,00
"பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெட்கக்கேடானது'' - காங்கிரஸ்
காணொளி, வீணான பொருட்களால் வித்தை நிகழ்த்தும் நெல்லை கலைஞர், கால அளவு 3,37
வீணானது என்று தூக்கி எறியப்படும் பொருட்களிலிருந்து அலங்கார பொருட்கள் செய்து வருகிறார் நெல்லையை சேர்ந்த இந்த முதியவர்.
காணொளி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி, கால அளவு 5,57
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
காணொளி, யார் இந்த பேரறிவாளன்? - முழு வரலாறு, கால அளவு 6,58
பேரறிவாளன் விடுதலை: ஒரு நீண்ட போராட்டத்தின் கதை
காணொளி, "திருமணம் வேண்டாம், குழந்தை மட்டும் போதும்" - ஒற்றை தாயாக மாறிய பெண், கால அளவு 3,00
சமூகத்திடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை டிம்பி ஒப்புக் கொள்கிறார். அதற்குத் தயாராகவும் இருக்கிறார்.
காணொளி, பேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம், கால அளவு 3,06
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிற செய்திகள்
இலங்கை நெருக்கடி: "காலி முகத்திடலில் வன்முறையை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது உண்மையே"
"காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கட்டளை பிறப்பித்தனர்" என அவர் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரித்த ஐ.நா
"கோடிக்கணக்கான மக்களை உணவுப் பாதுகாப்பின்மைக்குள்ளும், அதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் பஞ்சம் ஆகியவற்றுக்குள்ளும் தள்ளும் வகையில் அச்சுறுத்துகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்காக ரகசியமாக நடத்தப்படும் பள்ளிகள் - நடப்பது என்ன?
பள்ளியில் இருந்து ஓடி ஒளியும் குழந்தைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு பள்ளிக்கூடமே ஒளிந்திருப்பதை கேள்விப்பட்டதுண்டா? தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தானில் பெண்குழந்தைகளுக்காக நடைபெறும் ரகசிய பள்ளிக்கூடம் எப்படி இயங்குகிறது?
லட்சக்கணக்கில் இந்தியர்களைக் கொன்ற காற்று மாசுபாடு: அதிர்ச்சி ரிப்போர்ட்
வீசும் காற்றில் விஷம் பரவினால் வாழ்க்கை மோசமாகும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், வீசும் காற்றே விஷமாக மாறினால் விளைவு எப்படி இருக்கும்? அண்மையில் வெளியான 'லான்செட்' அறிக்கையின் தரவுகள் இதை நமக்கு புரியவைக்கின்றன.
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?
மாநில அமைச்சரவையின் அறிவுரைக்கு கட்டுப்பட்டே, மாநில ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்கீழ் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பது முன்பு இந்த நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளின் மூலம் நன்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பேரறிவாளன் விடுதலை: ஒரு நீண்ட போராட்டத்தின் கதை
1999 மே 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
பேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது ஏழு பேர் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் கே.டி.தாமஸ், ஓய்வுபெற்ற பிறகு இந்தத் தீர்ப்பை விமர்சித்துப் பேசினார்.
பேரறிவாளன் வீட்டில் கொண்டாட்டம்: "இனிதான் கொஞ்சம் காற்றை நான் சுவாசிக்க வேண்டும்"
"ஒவ்வொரு காலகட்டத்திலும் எல்லோரும் அவரவர்கள் சக்திக்கு மீறி இதற்காக உழைத்துள்ளனர். நேரடியாக அவர்களை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்" என, பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன?
நான் சிங்களர் விதத்தில், இந்த சந்தர்ப்பத்திலேனும் கவலை அடைந்து மாத்திரம் போதாது. இதற்கு துன்பப்பட்டு மாத்திரம் போதாது. இந்த ஆண்டிலாவது அல்லது இந்த சந்தர்ப்பத்திலாவது அந்த தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அச்சம், சந்தேகம் அடைந்து மறைந்து செய்ய வேண்டிய ஒன்று அல்ல இது.
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
யுக்ரேன் போரை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அதிபரின் மனைவி
இருவரும் கல்லூரி நாட்களில் இருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள், அங்கு அவர் தனது கணவர் சட்டம் படிக்கும் போது இவர் கட்டடக்கலை படித்து வந்தார்.பின்னர் இருவரும் தங்கள் துறையை மாற்றிக்கொண்டு நகைச்சுவையாளர்களாக வலம் வரத் தொடங்கினர்.
ரிசர்வ் வங்கி கையேடு: எத்தனை விதமான நிதி மோசடிகள்? தற்காத்துக்கொள்வது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறையின் பொது விழிப்புணர்வு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நிதி மோசடிகளின் செயல்பாடுகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது, 'BE(A)WARE' என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ளது.
கொளுத்தும் வெயில்: என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? எப்படி தற்காத்துக் கொள்வது?
அதீத வெப்பநிலை, இந்த கோடைக்காலத்தில் பொதுமக்களிடையே என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், அவற்றிலிருந்து எப்படி மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்?
அறிவியல்
விண்வெளியில் இறைச்சி உற்பத்தி: வெற்றி பெறுமா புதிய பரிசோதனை
விண்வெளி வீரர்களைச் சார்ந்திருக்கும் அளவுக்கு இந்த இறைச்சி உற்பத்தி பரிசோதனை முறை மிகவும் நிலையானதாக இல்லையென்று இதுகுறித்து சந்தேகமுடையவர்கள் கூறுகின்றனர்.
வரலாறு
ஆதீனங்கள் என்றால் என்ன? அவை தோன்றிய வரலாறு என்ன?
சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும் அதை மக்களிடையே பரப்பவும் மடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அப்படி தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.
சிறப்புச் செய்திகள்
பேரறிவாளன்: உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தில் விடுதலை
'மற்ற 6 பேரின் விடுதலையும் இந்த வழக்கின் தீர்ப்பிலேயே உள்ளது. ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆகையால், அமைச்சரவை முடிவிற்கு இப்போதும் அதிகாரம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. ஆகையால், தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.' என்கிறார் வழக்குரைஞர் பிரபு.
வீட்டு வேலை பார்த்துக் கொண்டே10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்
நேபாளைச் சேர்ந்த ஒற்றைத் தாயான லக்பா ஷெர்பா, ஒரு குகையில் தான் பிறந்தார். அவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தொடக்கத்தில், அவர் வாயிற்காவலராகப் பணியாற்றினார்.
அருண்ராஜா காமராஜ்: 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம் இதுதான்
'ஆர்ட்டிகிள் 15' - பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதுமே வரவேற்பை பெற்றதுடன் விவாதத்தையும் துவக்கி வைத்தது. அப்படியான இந்த படம் இப்போது தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என பெயரிடப்பட்டு ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் பலதார மணம் இந்தியாவில் பெரிய பிரச்னையா? அதற்கு எதிராக வழக்கு ஏன்?
28 வயதான முஸ்லிம் பெண் ஒருவர், இஸ்லாமிய மதத்தின் பிற்போக்கான பலதார மணத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' - வரலாறு
இலங்கை உள்நாட்டுப் போர் தொடங்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமானதாக இருந்தது கருப்பு ஜூலை சம்பவம். விடுதலைப்புலிகள் அமைப்பு, 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி, முதல்முறையாக ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. சிங்கள இனவாதக் குழுவினர் அதற்குப் பழி வாங்கினர்.
வங்கிப் பணிகள்: வட இந்தியர்களுக்காக தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா?
பொதுத்துறை வங்கிப் பணியிடங்களில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பின் மூலம் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மை என்ன?
வட கொரியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம்
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
இஞ்ஜினியரிங் படிக்காமலேயே சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவது எப்படி?
இந்தியாவில் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் பாதி இடங்களுக்கு சேர்க்கையில்லை என்று தெரிவிக்கிறது பத்திரிக்கை செய்திகள். ஆனால் அதே சமயம் தங்களது வேலைக்கு சரியான ஆட்கள் இல்லை என்று நிறுவனங்களும் கூறிவருகின்றன. நிலவரம் என்ன?
நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் - சொல்லும் செய்தி என்ன?
“இந்த ஆராய்ச்சி நாசாவின் மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வது குறித்த நீண்டகால ஆய்வு இலக்குகளில் முக்கியமானது. ஏனெனில், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் உணவுக்கான வாய்ப்பை இதன்மூலம் உருவாக்க முடியும்."
தமிழர் தேவசகாயத்துக்கு புனிதர் நிலை - நீண்ட இழுபறிக்கு பிறகு அங்கீகாரம், யார் இவர்?
இதுவரை புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித அல்போன்சாள், புனித அன்னை தெரசா அனைவரும் ஏதாவது ஒரு துறவற சபையை சார்ந்தவர்கள். இந்தியாவில் சாதாரண மனிதர் ஒருவர் புனிதராக உயர்த்தப்படுவது இதவே முதல் முறையாகும்.
தொலைக்காட்சி
பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
19.05.2022
புகைப்பட தொகுப்பு
2021இல் உலகின் கவனத்தை ஈர்த்த மிகச் சிறந்த புகைப்படங்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் 100 கோடி டோஸ் செலுத்தப்பட்டதை குறிக்கும் வகையில், பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனையின் செவிலியர்கள் நான்கு பேர், இந்துக்கள் பரவலாக போற்றும் துர்கா தேவியின் (வலிமை மற்றும் வலிமையுடன் தொடர்புடைய) உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது பரவலாக ரசிக்கப்பட்டது.
ஊடகவியல் கல்வி
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்