இந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது, முறைப்படி 1639ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி நிர்மாணிக்கப்பட்டதாக கருதியே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகரின் பழங்கால தோற்றத்தை விளக்கும் ஓவியங்களையும், புகைப்படங்களையும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1860ஆம் ஆண்டு வரையப்பட்ட மதராஸ் நகரை குறிக்கும் படம்.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1860களில் அப்போதைய மதராஸின் துறைமுக பகுதியிலிருந்து ஜார்ஜ் கோட்டை இப்படித்தான் காட்சியளித்தது.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1865இல் சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் கட்டடத்தின் தோற்றம்.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
இந்தோ - சரசனிக் பாணியில் கட்டப்பட்ட சேப்பாக்கம் ஆர்காட் நவாப் மாளிகையின் தோற்றம். இது 1880இல் வரையப்பட்டது.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
சென்னை என்றாலே பலரது நினைவுக்கு வரும் மெரினா கடற்கரை 1891இல் இப்படித்தான் இருந்தது.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1902ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு தேர்த்திருவிழாவை இந்த புகைப்படம் காட்டுகிறது.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1910இல் மூன்று பெண்கள் ஒருவருக்கொருவர் தலையில் பேன் பார்க்கும் காட்சி.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதைய சென்னை உயர்நீதிமன்றம்.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1929இல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், சென்னை மாநகரின் நதியோரத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த தொழில்துறை சேமிப்பு தொட்டிகள் தென்படுகிறது.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கோரி, 1930ஆம் ஆண்டு சென்னை நகர வீதிகளில் காந்தியின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தியபோது எடுத்த படம்.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1935ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், அக்கால சென்னை நகர வீதியின் நடப்பை காட்டுகிறது.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
1961ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்னை நேதாஜி சாலையின் தோற்றம்.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
2000ஆவது ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் எருமை மாடுகளை ஒருவர் குளிப்பாட்டும் காட்சி.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமி ஏற்படுத்திய பாதிப்பின் சுவடு மறையாத இடத்தில், உற்சாகமாக விளையாடும் குழந்தைகள்.
படத்தின் காப்புரிமைGetty ImagesImage caption
சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான எல்ஐசி கட்டடத்தின் தோற்றம் (ஜனவரி 04, 2006)