கோலாலம்பூர் விமானநிலையத்தில் கிம் ஜொங் நம் கொல்லப்பட்டதை அடுத்து மலேசியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையிலான விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
இரு நாடுகளும் அடுத்த நாட்டின் பிரஜைகள் தமது பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதை தடுத்துள்ளன.
இந்த கொலையின் பின்னணியில் வடகொரியா இருப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் சந்தேகிக்கின்றன.
ஆனால், இந்த விவகாரங்களின் பின்னணியில் இன்னுமொரு கதை இருக்கிறது. அது கிம் பரம்பரையின் கதை.
பிபிசியின் காணொளி.