பிபிசி தமிழில். . 1 மணி வரை இன்று
பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Reuters
நியூ யார்க் டிரக் தாக்குதலுக்கு பிறகு, உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியை படிக்க:நியூ யார்க் தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த டிரம்ப் உறுதி
பட மூலாதாரம், AFP
கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க உளவுத்துறை மற்றும் புளோரிடாவிலிருந்து வந்த கியூபா குடியேறிகள் சிலமுறை சந்தித்து பேசினார்கள். அதில் ஃபிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வது குறித்த திட்டங்கள் தீட்டப்பட்டன.
செய்தியை படிக்க: காஸ்ட்ரோவை கொல்ல ஒரு மில்லியன் டாலர் 'சுபாரி' கொடுக்கப்பட்டதா?
பட மூலாதாரம், AFP/Getty Images
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல சதித்திட்டம் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட செச்சேனைச் சேர்ந்த ஒருவரும் அவரது மனைவியும் சென்ற கார் உக்ரேன் தலைநகருக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளானதில் அந்நபர் காயமடைந்தார் மேலும் அவரது மனைவி கொல்லப்பட்டார்.
செய்தியை படிக்க: ரஷ்ய அதிபரை கொல்லத் திட்டமிட்டவரின் மனைவி சுட்டுக்கொலை
Footage shows New York suspect tackled by police
நியூ யார்க் டிரக் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், பள்ளி பேருந்து மீது தனது டிரக்கை மோதிய பிறகு கையில் துப்பாக்கி ஏந்தியப்படி ஓடும் காணொளி.
பட மூலாதாரம், AFP/Getty Images
பாகிஸ்தானில், புதிதாக திருமணம் ஆன பெண் ஒருவர், தனது கணவருக்கும், அவரின் உறவினருக்கும் பாலில் விஷம் கலந்து கொல்ல முயன்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தியை படிக்க: கணவனுக்காக பாலில் விஷம் கலந்த பெண்: குடித்த 15 பேர் பலி
பட மூலாதாரம், FABRICE COFFRINI/AFP/GETTY IMAGES
1984 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் குறிவைத்து தாக்கப்பட்ட சீக்கிய சமுதாயம் பற்றிய விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் ஒவ்வோர் ஆண்டும் உயிர்த்தெழுந்து வருகின்றன.
செய்தியை படிக்க: 1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - நடந்தது என்ன?
இந்தியாவின் முதலை பிரதேசம்: உயிர் அச்சத்தில் மக்கள்
ஒடிசாவில் உள்ள பிதர்கானிகா சரணாலயத்தில், மிகப்பெரிய முதலைப் பாதுகாப்பு திட்டம் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயத்தில் இத்திட்டம் தொடங்கப்படும் போது 74 முதலைகள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த முதலைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு உட்புகுந்து வருவதால், மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சமானது, 2015-ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அழிவின் தாக்கத்தால் உண்டானதா?, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நம்பிக்கையின்மையா? என்று வாதம் விவாதம் பகுதியில் நேயர்கள் தெரிவித்த கருத்தை தொகுத்து வழங்குகின்றோம்.
செய்தியை படிக்க: வடகிழக்கு பருவமழை தீவிரம்: சென்னை மக்களிடையே அச்சம் - காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :