குழந்தையை கொன்ற இடத்திலேயே பிடிபட்ட சிறுத்தை (காணொளி)
கோவை மாவட்டம் வால்பாறையில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
கடந்த 8ஆம் தேதி நடுமலை எஸ்டேட் பகுதியில், செய்துல் என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று பார்த்த போது குழந்தை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது.
இதையடுத்து ஆட்கொல்லியாக மாறிப் போன சிறுத்தையைப் பிடிக்க நடுமலை எஸ்டேட், சிஎஸ்ஐ சர்ச் வளாகம், பொதுப்பணித்துறை குடியிருப்பு மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நடுமலை எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. குழந்தை கொல்லப்பட்ட இடத்தின் அருகிலேயே சிறுத்தை சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பதவி விலகினார் ஜுமா: கடும் அழுத்தம் எதிரொலி?
- அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி
- இரட்டைச் சகோதரரை விட்டுவிட்டு சிறையில் இருந்து தப்பியவர் சிக்கியது எப்படி?
- ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர்
- எப்படி சாதித்தது 'கோலியின் இளம்படை?'- 5 முக்கிய காரணங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்