மகளிர் உலக கோப்பை யாருக்கு? தொடங்கியது இறுதியாட்டம்
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி 12 ஓவர்களின் இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.

பட மூலாதாரம், ICC
மகளிர் உலக கோப்பை யாருக்கு?
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரார்கள் வின்ஃபீல்ட் மற்றும் பேமவுண்ட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக வியாழக்கிழமையன்று டெர்பியில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், வியாழக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் நுழைந்தது.
அரையிறுதி போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். 115 பந்துகளில் 20 பவுண்டரிகள், 7 சிக்சர் உதவியுடன் 171 ரன்களை விளாசினார் கவுர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இறுதியாட்டத்தில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் முனைப்பாக உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்