அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்”

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்பு அந்நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத்தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 'மெரினா புரட்சி' படநிகழ்வு: 18 இளைஞர்களை கவுரவிக்காமல் முடிந்த நிகழ்ச்சி
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி - பதில்கள்
- ஜம்மு காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?- 10 தகவல்கள்
- சர்வதேச பதக்கம் வென்ற மலையகத் தமிழருக்கு டீ கோப்பை பரிசளித்த இலங்கை அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்