சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாம் தளத்தில் கல்வித் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 ஊழியர்களுடன் தனியார் சேனல்களுக்கு இணையாக இங்கு படப்பிடிப்புத் தளம் இயங்கி வருகிறது.
"தமிழை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க திமுக பாடுபடும்"
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாக்கிட தி.மு.க. அரசு உறுதியுடன் பாடுபடும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தடை கோரிக்கைக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்காமல் இருப்பதால் தமிழ் வடிவம் வெளியாகுமா அல்லது எப்போது வெளியாகும் என்பது விரைவில் அமேசான் தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
மெட்ராஸ் மாகாணத்தை பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கூறியதிலிருந்தே, தமிழ்நாடு என்ற பெயரே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்திற்காகப் போராடியவர்கள் யாரும் தமிழகம் என்ற பெயரை முன்வைத்திருக்கிறார்களா?
பருவநிலை மாற்றம், புயல் அபாயம், கன மழை என இயற்கையாக மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தீர்வை தரக்கூடியவர்களாக நாகப்பட்டினத்தில் உள்ள சுமார் 20 கிராம தன்னார்வலர்கள் காணப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை தயார்படுத்துவதில் சத்தமில்லாமல் ஒரு விழிப்புணர்வை இந்த வானொலி சேவை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் நடந்த 318 குழந்தை திருமணங்கள் - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்
Geetha Jeevan FBCopyright: Geetha Jeevan FB
`குழந்தைத் திருமணங்களை ஊக்குவிப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதேநேரம், `குழந்தைகளின் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் செயலிழந்து விட்டன' என்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள். உண்மையில் என்ன நடக்கிறது?
கொரோனா தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. இந்த காலகட்டத்தில் 40 சதவிகிதம் வரையில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
இதனைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் கடந்த 31ஆம் தேதி அரசு தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில், மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், 1098 சைல்டு லைன் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கூட்டத்தில் பேசிய தமிழக சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன், `குழந்தைத் திருமணங்களை நடத்துகிறவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய திருமணத்தில் கலந்து கொள்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என எச்சரித்தார்.
குழந்தை திருமணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை: கமல்ஹாசன்
TwitterCopyright: Twitter
“சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை," என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உறுதியான தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த ஆண்டும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்," என்று கூறியுள்ளார்.
"தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம்," என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் நேரலை செய்திகள் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்
நேயர்களுக்கு வணக்கம். இந்த நேரலை பக்கத்தில் இன்றைய நாளில் உலக அளவிலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை தொகுத்து வழங்குகிறோம்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றின் பிளஸ் டூ வகுப்பு ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் சுமத்திய பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் அந்த ஆசிரியர் கைதாகியுள்ளனர். அந்த சம்பவத்துக்கு பிறகு வேறு சில பள்ளிகளின் மாணவிகள் தரப்பில் இருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில், தனியார் பள்ளி முதல்வர் ஒருவரை மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்தபோதும் அவர் விசாரணைக்கு வராமல் தவிர்த்துள்ளார்.
தமிழ் வழியில் பட்டப்படிப்புகளை நிறைவு செய்த மாணவர்கள், முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை நிறைவு செய்து விட்டு ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிகின்றனர். கல்லூரி காலங்களில் செமினார் வகுப்புகளில் இவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அதுவே, அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு பேச்சு வழக்கில் சரளமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.